tamilnadu

img

16 வயதுச் சிறுவன் மீதும் கொலைவெறித் தாக்குதல்

கான்பூர்:
‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு, 16 வயது முஸ்லிம் சிறுவன் மீதும்,இந்துத்துவா கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது.வட இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு ஆயுதமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தை இந்துத்துவா மதவெறிக் கூட்டம் கையில் எடுத்துள்ளது. ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு, தில்லியில் மதரசா ஆசிரியர் முகம்மது மோமின், மேற்குவங்கத்தில் ஹால்தர், ஜார்க்கண்ட்டில் இளைஞன் தப்ரிஸ் ஆகியோர் மோசமான முறையில் தாக்கப்பட்டனர். இளைஞர் தப்ரிஸ் படுகொலையும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறச்சொல்லி, உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே கித்வாய் நகரைச் சேர்ந்த முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லிம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. குல்லா அணியக் கூடாது என்று மிரட்டியுள்ளது.சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், வெறிக்கும்பலை விரட்டிவிட்டு, தாஜூதீனை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது, தாஜூதீன் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;